பிரித்தானியாவில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியானது! பரபரப்பு தகவல்கள்

பிரித்தானியாவில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியானது! பரபரப்பு தகவல்கள்

பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள Manchester Arena-வில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியான Ariana Grande-ன் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலால் 22 பேர் பலியாகினர் மற்றும் 119 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் எட்டு வயது குழந்தை Saffie Roussos, 18-வயதுடைய Georgina Callander மற்றும் 26-வயதுடைய John Atkinson ஆகியோரும் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த கொடூர தாக்குதலால் 12 குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.