இலங்கையின் தமிழர் பகுதியைச் சேர்ந்த இரட்டைப் பெண் குழந்தைகளுடன் முழுக்குடும்பமே மரணித்த பெரும் சோகம்!

மஹியங்கனை – பதுளை வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இரட்டை பெண் பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பை சேர்ந்த 56 வயதான ரெலின்டன் ஜோசப், அவரது மனைவி, அவர்களின் இரண்டு மருமகன்கள், மகள் இருவர், மூன்று பேத்தி மற்றும் ஒரு பேரன் இந்த விபத்தில் உயிரிழந்துதுள்ளனர்.

இந்த குடும்பத்தில் 13 வயதான சேஹான் மாத்திரமே அந்த குடும்பத்தில் உயிர் தப்பி பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் உறவுக்கார் பிள்ளை ஒன்றும் காயத்துடன் சிசிக்சை பெற்று வருகின்றார்.

உறவுக்கார பிள்ளை இந்த குடும்பத்தினருடன் மட்டக்களப்பிற்கு செல்லும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மட்டங்களப்பில் இருந்து வந்த இந்த குடும்பத்தினர் ஜாஎல, பின்னவல, உட்பட பல இடங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளனர். இன்று மீண்டும் சொந்த ஊர் திரும்பும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த மூவர் சிறு காயங்களுடன் மஹியங்கனை வைத்தியசாலையில் சிசிக்சை பெற்று வருகின்றனர்.

இந்த கோர விபத்து பதுளை – மஹியங்கனை வீதியில் இன்று அதிகாலையில் ஏற்பட்டுள்ளது. பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தியதலாவையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்துடன், மட்டக்களப்பு நோக்கி பயணித்த வான் மோதியதில், அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சாரதியின் நித்திரை தூக்கமே விபத்து ஏற்படக் காரணமாக அமைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

விபத்தை தடுக்க முயற்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளமை ஒட்டுமொத்த இலங்கையர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.