ஒரே கல்லறையில் புதைகப்படும் 10 பேரின் சடலங்கள் – சோகமயமானது மட்டக்களப்பு

மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 10 பேரின் சடலங்களும் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு குறித்த சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று அதிகாலை 1.30 தனியார் பேருந்துடன் வேன் ஒன்று மோதியதினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விபத்தில் வேனில் பயணித்த 12 பேரில் 10 உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் உயிரிழந்த 10 பேரின் சடலமும் தற்போது அவர்களின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை காலை 10 பேரின் சடலமும் ஒரே கல்லரையில் புதைக்கப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.