பாகுபலிக்கு பிறகு அடுத்த பிரம்மாண்ட படம்! பிளானை மாற்றிய ராஜமௌலி

பாகுபலிக்கு பிறகு அடுத்த பிரம்மாண்ட படம்! பிளானை மாற்றிய ராஜமௌலி

இயக்குனர் ராஜமௌலி இன்று இந்திய சினிமாவை உலக சினிமா அரங்கில் தலைதூக்கி நிற்க செய்து விட்டார். பாகுபலி இன்று உலகளவில் வசூல் சாதனை செய்துவருகிறது.

ரூ 1500 கோடியை தாண்டி வசூல் போய்க்கொண்டிருக்கும் வேளையில் ராஜமௌலி நினைத்தால் பாகுபலி 3 ஐ இயக்கலாம் என்பது பலரின் எதிர்பார்ப்பு.

ஆனால் அவரோ அது ஓவர். வருங்காலத்தில் மகாபாரதத்தை எடுக்க வேண்டும் என்பது ஆசை. இப்போதைக்கு பிளான் இல்லை என தெரிவித்திருந்தார்.

ஆனால் வேறொரு இயக்குனர் மகாபாரத்தை மோகன் லாலை வைத்து எடுக்கப்போவதாக ஒரு சில தகவல்கள் வெளியானது. தற்போது ராஜமௌலி மகாபாரதத்திற்கு பதிலாக வீரசிவாஜியின் வாழ்க்கையை படமாக இயக்க போகிறாராம்.