20 வயது இளைஞன் கத்தியால் குத்தி படுகொலை – காணொளி

ஹொரணை நகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் ஹொரணை பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

கொலையை புரிந்த பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மேலும் ஒருவர் ஹொரணை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட குரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.