பௌத்தர்களின் மிக முக்கியமான வழிபாட்டுத் தளங்களில் ஒன்றான கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையில் தலதா மாளிகை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலதா மாளிகையின் நிர்வாகச் செயலாளர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு தலதா மாளிகை மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வழமையான வழிபாட்டு நிகழ்வுகளை பௌத்த பிக்குகள் மேற்கொள்வார்கள் என குறிப்பிடப்படுகிறது.