இலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி! தவிக்கும் பிள்ளைகள்..

இன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை – பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இருப்பவர்) அவரது மனைவியான புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தை சேர்ந்த நடராசரின் கௌரி எனும் கேதாரகௌரி ஆகிய இருவரும் மரணமடைந்தவர்களென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களின் இரு பிள்ளைகளில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இது தொடர்பில் சுவிட்சலாந்து அரசாங்கத்தின் தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.