கொழும்பில் இன்று வெடித்த வெடிகுண்டைப் பற்றி தெரியுமா? 1000 ஐ இழுத்தால் உடல் சிதறி இருக்கும் பயங்கரம்!

கொழும்பு – கொச்சிக்கடை, ஜிந்துப்பிட்டி சந்தியிலுள்ள கொழும்புத் துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்த வெடிகுண்டு பாதுகாப்பு தரப்பினரால் தகர்க்கப்பட்டது.

குறித்த இடத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வான் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.இதையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த முப்படையினரும் குறித்த வானை சோதனை செய்தனர்.

இதில் 4 சமையல் எரிவாயுச் சிலிண்டர்களை இணைத்து குறித்த குண்டு பொருத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயழிலக்கும் பிரிவால் இந்த குண்டு செயலிழக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், குறித்த குண்டில் நூல் ஒன்று கட்டப்பட்டு இருந்ததாகவும் அந்த நூலின் மறு நுனியில், 1000 ரூபாய் நாணயத்தாள் ஒன்று கட்டப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நாணயத்தாளை காண்பவர்கள், அதனை எடுக்க முற்படும்போது, ​வெடிகுண்டு வெடிக்கும் வகையிலேயே சூட்சுமமான முறையில் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் குண்டு ​தகர்க்கச் செய்யப்பட்டதாகவும் இதன்போது, பல வீடுகளின் கூரைகள், யன்னல்கள் சேதமடைந்துள்ளதுடன் கொழும்புத் துறைமுகத்தின் மதிலும் உடைந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.