யாழில் நீதிமதி இல்லத்துக்குள் திடீரென புகுந்த மர்ம வாகனம்! பரபரப்புடன் விரைந்த பொலிஸார்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் மதிலை உடைத்துக் கொண்டு வாகனம் ஒன்று உட்புகுந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் இது சாதாரண விபத்து என தெரியவந்ததை அடுத்து பதற்ற நிலை தணிந்துள்ளது.நீதிபதி கடமைக்கு செல்லும் நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ். கச்சேரி – நல்லூர் வீதியில் அமைந்துள்ள நீதிபதியின் இல்லத்துக்கு முன்பாக இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

வேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நீதிபதியின் இல்ல வாயில் கதவுடன் மோதியது. இதில் நீதிபதியின் இல்ல வாயில், அருகிலுள்ள வீட்டு மதில் ஆகியவை இதனால் உடைந்து சேதமாயின. அப்பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்றும் முறிந்தது.

சம்பவத்தையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த பொலிஸார் வாகனத்தை தீவிர சோதனை செய்தனார்.வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.