உயிரிழந்தோரின் எண்ணிக்கை 321 ஆக அதிகரிப்பு

நாட்டில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இதன்போது காயமடைந்த 480 க்கும் அதிகமானோர்,
தேசிய வைத்தியசாலை
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை
கொழும்பு வடக்கு மற்றும் தெற்கு வைத்தியசாலை (களுபோவில வைத்தியசாலை)
மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ள அதேநேரம், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 29 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.