பதுளையில் வீடொன்றின் முன்புறம் வெடி பொருட்கள் மீட்பு! சந்தேக நபர் தலைமறைவு

பதுளை ஹப்புத்தளை – மாதிரிபுர பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து துப்பாக்கி மற்றும் வெடி மருந்து ஆகியன மீட்க்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து அந்த வீட்டிலிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை ஹப்புத்தளை – மாதிரிபுர பகுதியிலுள்ள வீடு ஒன்றை இன்று அதிகாலை முதல் ஹப்புத்தளை பொலிஸார் மற்றும் விமானப் படையினர் இணைந்து சோதனை நடத்தியுள்ளனர்.

மோப்ப நாய்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கை வீட்டிலிருந்து சந்தேகத்திற்கு இடமான எந்தவொரு பொட்களும் மீட்க்கப்படவில்லை.

இந்நிலையில் வீட்டின் முன்னாலுள்ள வேலியில் பை ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் அதற்குரிய ரவைகள் மீட்க்கப்பட்டுள்ளன.

இதன்போது வீட்டின் உரிமையாளர்களான கணவன் மற்றும் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.