கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் பாரிய வெடிகுண்டு

கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த ஹோட்டல் ஒன்றில் பாரிய வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கட்டான பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் இருந்த வெடிகுண்டை இலங்கை விமான படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு செயழிக்க செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பை ஒன்றில் இருந்து இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இதே பகுதியிலுள்ள தேவாயலம் ஒன்றில் தற்கொலை குண்டுத்தாக்குல் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது நூற்றுக்கும் மேட்பட்டோர் உயிரிழந்தனர்.