மற்றுமொரு உந்துருளி வெடிக்க வைக்கப்பட்டுள்ளது

புறக்கோட்டை ஜந்து லாம்பு சந்தியில் உந்துருளியொன்று பாதுகாப்பு படையினரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட உந்துருளியை சோதனையிட்ட பாதுகாப்பு படையினர் குறித்த உந்துருளியை இவ்வாறு வெடிக்க வைத்துள்ளனர்.

சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமாக குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த உந்துருளி சோதனையிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்தே குறித்த உந்துருளி பாதுகாப்பு படையினரால் வெடிக்க வைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.