கொழும்பில் கொலைவெறி தாக்குதல்! தற்கொலை குண்டுதாரிகளின் புகைப்படங்கள் வெளியாகின

கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விடுதிகளான சினமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல் ஆகியவற்றில் குண்டுத் தாக்குதல்களை நடத்திய தற்கொலைதாரிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களின் படங்களே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.

பிரித்தானியாவின் ‘டெய்லி மெயில்’ பத்திரிகை இந்தப் படங்களை வெளியிட்டுள்ளது. இன்ஷாப் இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் இப்ராஹிம் ஆகியோரின் படங்களே வெளியிடப்பட்டுள்ளன.

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னர் இவர்களின் தந்தையான பிரபல வர்த்தகர் இப்ராஹிம் தெமட்டகொடவில் வைத்துப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 350க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.