தமிழர் பகுதியில் வைத்தியசாலையை நோட்டமிட்ட மர்ம நபர்களால் பரபரப்பு

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டம் பெரியகல்லாற்றிற்கு மோட்டார் சைக்கிளில் டயர் வாங்குவதற்காக சென்றவர்கள், பெரியகல்லாறு வைத்தியசாலையை நோட்டமிட்ட சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

அவர்களின் நடத்தையை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் அவர்களை விசாரித்தபோது டயர் வாங்குவதற்கு வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவித்த பெயருக்கும் அவர்களது அடையாள அட்டையில் இருந்த பெயர்களுக்கும் வித்தியாசம் இருந்துள்ளது.

உடனடியக குறித்த நகர்கள் மீது சந்தேகம் கொண்ட அப்பகுதி இளைஞர்கள் களுவாஞ்சிகுடி பொலிசாருக்கு அறிவித்தனர். உடன் ஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் குறித்த இருவரையும், சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

அத்தோடு, அவர்கள் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நாளை வியாழக்கிழமை (25) நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.