இலங்கை வான்பரப்பில் டிரோன்களுக்கு தடை; அதிர்ச்சியில் புகைப்படக் கலைஞர்கள்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான நிலைமையினையடுத்து புகைப்படக் கலைஞர்கள் பயன்படுத்தும் உலங்கு வான் படப்பிடிப்பான்கள் (டிரோன்கள்) வானில் பறக்கமுடியாதென தடை விதிக்கபட்டுள்ளது.

இந்த தடை மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்குமென பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனுடன் ஆளில்லா விமானங்களும் இலங்கை வான்பரப்பில் மறு அறிவித்தல்வரை பறக்கமுடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் நாடுமுழுவதும் ஊடுருவியிருக்கலாம் என்ற அச்ச நிலை நிலவுவதனடிப்படையில் இந்த அறிவிப்பு விடுக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.