வவுனியாவில் இளைஞரொருவரை துரத்தி சென்று மடக்கி பிடித்த பொலிஸார்

வவுனியா நகர் பகுதி நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்ற இளைஞரொருவர் துரத்தி சென்று மடக்கி பிடிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

வவுனியா – பூந்தோட்டம் பகுதியிலிருந்து வவுனியாநகர் நோக்கி சென்ற இளைஞரே இன்று காலை பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் தலைக்கவசம் இன்றி சென்றதாலேயே துரத்தி சென்று பிடிக்கப்பட்டதாகவும், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சந்தேகநபரான இளைஞர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.