கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பதற்றம்? மக்கள் வெளியேற்றம்!

கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையம் மற்றும் அந்தப் பகுதிக்கான வீதிகள் என்பன மூடப்பட்டு பயணிகள் மற்றும் பொலிஸார் வெளியேற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

வெடிபொருட்கள் ஏதாவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினடிப்படையிலேயே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு கூறுகின்றது.

இதேவேளை கட்டு நாயக்க விமான நிலையத்துக்கான வீதியும் மூடப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.