யாழின் கந்தசுவாமி ஆலத்தின் அருகில் ஏற்பட்ட பதற்றம்! பொலிஸார் – இராணுவத்தினர் குவிப்பு

யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பெரும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்டி நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டுள்ளது.

இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.

இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கில் உரிமையாளர் வந்துள்ளார்.

அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார், இராணுவத்தை கொண்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட பின்னர் உரிமையாளரிடம் மோட்டார் சைக்கிளை கையளித்துள்ளனர்.

விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினையும் சோதனை செய்த இராணுவத்தினர் அப் பொதியினை அங்கிருந்த அகற்றிச் சென்றுள்ளனர்.

இச் சோதணை நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.