சற்று முன் யாழில் ஐவர் கைது! தீவிர விசாரணையில் பொலிஸார்!

கொழும்பு தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் முஸ்லீம் நபர்கள் 5 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நாவாந்துறை 5 சந்திப் பகுதியில் வைத்து இன்று காலை கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சந்தேகத்திற்கிடமாக நின்ற காரணத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குண்டுத் தாக்குதலின் பின்னர், யாழ்ப்பாணத்தில் பொலிஸார் உட்பட இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.