கொழும்பு வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் சற்று முன்னர் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை இனம்காணப்படாத குறித்த சடலம் வெள்ளவத்தை தொடருந்து நிலைய வீதிக்கு அண்மையான கடற்பகுதியிலேயே மிதப்பதாக கூறப்பட்டுள்ளது.
தற்பொழுது அந்த இடத்திற்கு வருகைதந்துள்ள பொலிஸார் அதுகுறித்த மேலதிக விசாரணைகளை நடத்துவதாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும் இதுகுறித்த மேலதிக தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.