கனடாவில் இடம்பெற்ற சோகம்! தாய், குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி பலி!

கனடாவின் ஒண்டாரியோ நகரில் உள்ள வீடு ஒன்றில் நேற்று திடீரென தீப்பிடித்து தீ மளமளவென பற்றி எரிந்தது.

இந்த விபத்தில் தாயும், நான்கு குழந்தைகளும் சிக்கி உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் தீயை போராடி அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.