பயங்கவாதிகளுக்கு கோடிக்கணக்கான நிதியை கொட்டிக்கொடுத்த கோடீஸ்வரர்கள்! வெளியான உண்மைகள்

இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள தெளஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்புக்கு கோடிக்கணக்கான நிதியை வழங்கியுள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் பலரை இனங்கண்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெளஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பு பில்லியன் கணக்கில் சொத்துக்களை பெற்றுக் கொள்வதற்கு இந்த கோடீஸ்வரர்கள் உதவியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்த வகையில் குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நகை வர்த்தகரொருவரை கைது செய்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட வர்த்தகர்களின் வங்கி வைப்புக்களையும் சோதனைக்குட்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கோடீஸ்வர வர்த்தகர்கள்பெருமளவு நிதியை அந்த பயங்கரவாத அமைப்புக்கு வழங்கியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவருகிறது.

தௌஹித் ஜமாத் பயங்கரவாத அமைப்பின் நிதி, அவர்களது வைப்புக்கணக்கு மற்றும் தற்கொலைதாரிகளாக கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பின் அங்கத்தவர்களின் வங்கிக் கணக்கையும் சோதனையிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த அமைப்புக்கு உதவியவர்கள் என்ற வகையில் இனங்காணப்பட்டுள்ள வர்த்தகர்கள், ஏனைய தரப்பினர்களினதும் வங்கிக் கணக்குகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன.

மேற்படி அமைப்புக்கு உதவிய சகலரையும் இன்னும் குறுகிய காலத்தில் கைது செய்ய முடியுமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.