குளியாப்பிட்டியில் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல்

குளியாப்பிட்டி கரந்திப்பபொல பகுதியில் முஸ்லிம் மக்களின் கடைகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் பல வர்த்தக நிலையங்கள் சேதமாகின. இந்த தாக்குதலை நடத்திய சந்தேகத்தின் பேரில், மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க கோரி, ஒரு குழுவினர் பொலிஸ் நிலையத்தின் முன்பாக குழுமியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.