மறு அறிவித்தல் வரை வட மேல் மாகாணம் முழுதும் ஊரடங்குச் சட்டம்

நாடுமுழுவதும் இன்றிரவு 9 மணி தொடக்கம் நாளை அதிகாலை 4 மணிவரை ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

வடமேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் அறிவிக்கப்படும் வரையில் இச்சட்டம் அமுலில் இருக்கும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அப் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டே இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.