யாழ் மாவட்ட செயலக சூழலில் மர்ம நபரை மடக்கி பிடித்த படைத்தரப்பு

யாழ்ப்பான மாவட்ட செயலக சூழலில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய முஸ்லிம் இளைஞன் ஒருவரை இன்று மதியம் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பில்…

யாழ்ப்பான மாவட்ட செயலக சூழலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஓர் இளைஞன் நடமாடியுள்ளார்.குறித்த இளைஞன் மாவட்ட செயலக சூழலில் பல தடவைகள் அங்கும் இங்குமாக திரிந்துள்ளார்.

அவ்வாறு நீண்டநேரமாக நடமாடிய இளைஞனை கண்ட சிலர் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பொலிசாருக்கு கிடைகப்பெர்ற தகவலையடுத்து மாவட்ட செயலகத்துக்கு வந்த இளைஞனை மடக்கி பிடித்தனர்.

பொலிசார் குறித்த இளைஞனை விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணான தகல்களை வழங்கியையினால் மேலதிக விசாரணைகளுக்காக அவரை கைது செய்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 33 வயதுடைய டுமல சூரிய பொலிஸ் பிரிவில் வசிக்கும் இளைஞன் என இனம் காணப்பட்டுள்ளார்.

தாம் யாழ்ப்பாணத்துக்கு மாலைகள் விற்பனை செய்யவே வருகைதந்ததாக தெரிவித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.