விடுதலைப் புலிகள் சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் எங்கே? யாழில் சரமாரியாக கேள்வி

விடுதலைப் புலிகள் சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் எங்கே என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இதில் வைத்து மேற்படி கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். மேலும் கூறுகையில்,

எங்களுடைய மக்கள் தங்கள் நகைகள் அனைத்தையும் கொண்டு சென்று விடுதலைப் புலிகளிடம் அடகு வைத்தார்கள். அடகு வைக்கப்பட்ட நகைகளை முன்னைய அரசாங்கம் மீட்டு உரியவர்களுக்கு திருப்பி கொடுத்தது.

இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. தேர்தல் வந்தது. அன்றைய தினம் வரை கொடுக்கப்பட்ட நகைகள் போக மீதி நகைகள் எங்கே.

இதுவரையில் யாராவது நாடாளுமன்ற உறுப்பினரொருவர் இது தொடர்பில் கேள்வியெழுப்பி இருக்கின்றார்களா? விடுதலைப் புலிகள் சேர்த்து வைத்திருந்த கோடி கோடி பெறுமதியான பணம் எங்கே?

இது தொடர்பில் யாராவது கேட்டார்களா? ஏன் கேட்கவில்லை என வினவியுள்ளார்.