ஸ்டாலினிற்கு வாழ்த்து செய்தி அனுப்பிய புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன்

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அமோக வெற்றிபெற்ற திராவிட முன்னேற்றக்கழகத்திற்கும், மு.க.ஸ்டாலினிற்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான த.சித்தார்த்தன்.

அவர் அனுப்பிய கடிதத்தில்,

“மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றிபெற்ற திராவிட முன்னேற்றக்கழக கட்சிக்கும், வெற்றிக்கு அடித்தளமிட்ட கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிற்கும் எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க முழுமையாக உழைத்த கலைஞரின் வழிநின்றி செயலாற்றி வரும் கட்சியும், அதன் தலைவரும் தொடர்ந்தும் எங்கள் மக்களின் துயர் துடைக்க முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டுமென உரிமையுடன் எதிர்பார்க்கின்றோம்.“ என குறிப்பிடப்பட்டுள்ளது.