மனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்..! நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா?

தென் மாவட்டங்களில் மொய் விருந்து என்பது மிகவும் பிரபலமான ஒன்று. தங்கள் வீட்டில் குறிப்பிட்ட காலத்திற்கு எந்த விஷேசமும் வரவில்லை என்றால் வீட்டில் மொய் விருந்து வைத்து தாங்கள் தங்களது உறவினர்கள் வீட்டிற்கு செய்த செய்முறைகளை திரும்ப பெற்றுக்கொள்வார்கள்.

அதுபோல, மதுரை செல்லூர் மேலத்தோப்பை சேர்ந்த கர்ணன் என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். அவரது குழந்தைகள் மனைவியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த குழந்தைகளுக்கு அவரது மனைவி காதணி விழா நடத்த திட்டமிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் தான் தனது மனைவியை பிரிந்து வாழ்வதாகவும், தனது மாமனார், மற்றும் மாமியாரின் தூண்டுதலின் பேரில் தனது சம்மதமின்றி காதணி விழா ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகவும், அந்த விழாவிற்கும், தனக்கும் சம்மந்தம் இல்லை எனவும், அதனால் தான் முறை செய்தவர்கள் தனக்கு திரும்ப முறை செய்வதாக எண்ணி அந்த காதணி விழாவிற்கு செல்ல வேண்டாம் என்று குறிப்பிட்டு ஒரு பொது அறிவிப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குடும்பத்திற்குள் சண்டைகள் வருவது சகஜம் தான் அதை பேசி தீர்த்துக்கொள்ளதான் பார்க்க வேண்டும். இப்படி பொது வெளியிலா கொண்டு வர வேண்டும் என பலர் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.