கிழக்கில் ஹிஸ்புல்லாஹிற்கு மீண்டும் மேலதிக முக்கிய பொறுப்புக்களை வழங்கிய மைத்திரி

கிழக்கு மாகாணத்தினைச்சேர்ந்த மூன்று மாவட்டங்களுக்கும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக ஜனாதிபதி மைத்திரிபாலவினால் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வினால் கிழக்கு மாகாணத்தினை விஷேடமாக அபிவிருத்திசெய்யும் வகையில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை மட்டக்களப்பு,திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக நியமித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் துரித அபிவிருத்திகளை மையமாக வைத்து இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.