எச்சரிக்கை: இதயம் பலவீனமானோர் பார்க்கவேண்டாம்! யாழில் இன்று காலை நடந்த அனர்த்தம்!!

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி முன் இடம்பெற்ற வீதி விபத்தில் 4 மாணவர்கள் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ் போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொட்டடி பகுதியிலிருந்து வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் நடந்து வந்து கொண்டிருந்த மாணவர்களை மோதித்தள்ளியுள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் இருவர் உட்பட மூவர் வீதியின் அருகில் இருந்த வடிகானுக்குள் தூக்கி வீசப்பட்டனர். அதனால் மாணவர்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர் எனவும் அவர்கள் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தினை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்யுமாறு கோரி சம்பவ இடத்திற்கு வந்த பொலிசாருடன் பொதுமக்கள் முரண்பட்டதுடன் பொலிசார் சந்தேகநபரை கைது செய்வதில் இழுத்தடிப்பு செய்வதாக குற்றஞ்சாட்டினர்.

இதனால் ஒரு மணித்தியாலம் குறித்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிக்கப்பட்டதுடன் பொது மக்கள் வீதியில் இறங்கி பொலிசாருடன் முரண்பட்டனர். விபத்தினை ஏற்படுத்திய முச்சக்கரவண்டியினை விபத்து நடைபெற்ற இடத்திலிருக்கும் சிசிடிவி கமராவின் உதவியுடன் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மாணவிகள் யாழ் போதனா வைத்தியசாலையில் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.