முஸ்லிம் எம்.பிகளுடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை காலை இடம்பெறவுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தனியார் ஊடகம் ஒன்றுக்கு குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு கொழும்பு – 07, விஜயராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்றள்ளது.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டான தீர்மானத்திற்கமைய கடந்த திங்கட்கிழமை முஸ்லிம் அமைச்சர்கள், இராஜங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் தங்களின் பதவிகளை இராஜினாமாச் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.

இதன்போது Action Planனொன்றும் தயாரிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அஸ்கீரிய மற்றும் மல்வத்த மகாநாயக்க தேரர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அரச வைத்தியர் சங்கம் ஆகியவற்றினை சந்தித்து முஸ்லிம் சமூகத்தின் நிலை தொடர்பாக தெளிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டது.

இதன் முதலாவது சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.