இலங்கையை அச்சுறுத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள்! இஸ்ரேல் எடுத்துள்ள நடவடிக்கை

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை இல்லாமல் செய்வதற்கு இஸ்ரேல் முன்வந்துள்ளது.

அந்த வகையில், இஸ்ரேலின் யமாம் பயங்கரவாத ஒழிப்பு பொலிஸாரின் மூலம் இலங்கைக்கு உதவி வழங்க அந்நாடு முன்வந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலில் தொழில்புரியும் இலங்கையர்கள், அந்நாட்டிலுள்ள அதிகாரிகளிடம் ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து தகவல் வழங்கியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்தே, இவ்வாறு தமது பொலிஸ் பிரிவின் மூலம் இலங்கைக்கு உதவி வழங்க இஸ்ரேல் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகிலுள்ள பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் யமாம் பொலிஸாருக்கு மாத்திரமே பயப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த யமாம் பொலிஸார் எந்த இடத்திலிருந்து செயற்படுகின்றார்கள் என்பதை இஸ்ரேல் மக்களே அறியாதுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலினால் இலங்கை இராணுவத்துக்கு பயிற்சியொன்றும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.