மோடியை வியக்க வைத்த மைத்திரியின் சிறப்புப் பரிசு! அது என்ன தெரியுமா??

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமாதி நிலையான வெண்தேக்கு மரத்தில் கையால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இதனைச் செதுக்க இரண்டு ஆண்டுகள் பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தியான முத்திரை என அழைக்கப்படும் யோக நிலையில் புத்தர் அமர்ந்திருக்கும் வகையில் இந்த சிலை செதுக்கப்பட்டுள்ளது.

இதனை பெற்றுக்கொண்ட இந்தியப் பிரதமர் மோடி, இந்தப் புத்தர் சிலை, ஒரு சிறப்பு நண்பரிடம் இருந்து கிடைத்த சிறப்பு பரிசு என்று தெரிவித்துள்ளார்.

அது மட்டமல்லாது இப்பரிசால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.