கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தின் மிதிபலகை உடைந்து விழுந்ததில் இருவர் பலி

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தின் மிதிபலகை கடுகண்ணாவை பகுதியில் வைத்து உடைந்து வீழ்ந்ததில் பேருந்தின் நடத்துனரும் பயணி ஒருவரும் உயிரிழந்தனர்.

மட்டக்குளி டிப்போவுக்கு சொந்தமான அரச பேருந்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முன்பக்க மிதிபலகை உடைந்து வீழ்ந்ததில் அதில் நின்ற இருவரும் முன்சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் சம்மாந்துறையை சேர்ந்த சேகர் என்ற நடத்துனரே இவ்வாறு உயிரிழந்த மற்றவரின் தகவல்கள் வெளியாகவில்லை

நடத்துனரின் சடலம் ஹேநாவலை வைத்தியசாலையிலும் மற்றவரின் சடலம் மாவனல்லை வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.