வவுனியாவில் கோரவிபத்து! இளைஞர் பலி!

வவுனியாவில் கற்பகபுரம் பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞன் இளஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

வவுனியாவில் இருந்து பூவரசங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கற்பகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அதே திசையில் ஹயஸ் ரக வாகனம் முச்சக்கரவண்டியை முந்திச்செல்ல முற்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்தி சென்ற வவுனியா பத்தினியார் மகிழங்குளத்தை சேர்ந்த 25 வயதான சிவபெருமாள் கஜேந்திரன் என்ற இளைஞரே மரணடைந்துள்ளார்.

இந்நிலையில் ஹயஸ் வாகனத்தையும் முச்சக்கரவண்டியையும் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்ற பொலிஸார் ஹயஸ்வாகன சாரதியையும் கைது செய்துள்ளனர்.

மரணமடைந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.