தமிழர் காணியில் உரப்பையில் விவசாயிக்கு காத்திருந்த பயங்கரம்

வவுனியா வேலங்குளம் பகுதியில் தோட்ட காணியிலிருந்து வெடிபொருள்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.

காணி உரிமையாளர் உழவியந்திரம் மூலம் நிலத்தை பண்படுத்திய போது, உரப்பையில் சுற்றி காணப்பட்ட சந்தேகத்துக்கிடமான பொருள்களை அவதானித்து அதிர்ச்சி அடைந்த விவசாயி பொலிஸாருக்கு தெரியபடுத்தியுள்ளார்.

அங்கு விரைந்த பூவரசங்குளம் பொலிஸார் உரப்பையில் இருந்து, ஐந்து கைக்குண்டுகள் இருப்பதை அவதானித்தனர்.