காணாமல்போன பிரபல பாடசாலை மாணவி- 3 நாட்களின் பின் சடலமாக மீட்பு!

பதுளை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை மாணவி ஒருவர் மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாணவியில் சடலம் இன்று காலை 7.30 மணியளவில் லொங்கல்ல நீர்தோக்கத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பதுளை, மெத பத்தன பகுதியை சேர்ந்த 19 வயதுடைய லக்ஷிகா மதுவந்தி என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்படுள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி குறித்த மாணவி காணாமல் போயிருந்ததாக பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கந்தகெட்டிய பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து மாணவியை தேடும் நடவடிக்கைல் ஈடுபட்டுள்ள்ளனர்.

இதன் போது குறித்த மாணவியின் பொருட்கள் சில லொங்கல்ல நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள புதர் ஒன்றிற்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் லொங்கல்ல நீர்தேக்கத்தில் தேடுதல் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையில் மாணவியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளாரா அல்லது கொலை செய்யப்பட்டரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.