சுவிசில் மர்மமான முறையில் உயிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் சடலம் கண்டுபிடிப்பு!

சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர் நிறைந்த பகுதி ஒன்றிலிருந்து தவசீலன் சபாநாதன் (வயது 50 ) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

கடந்த 10ஆம் திகதி முதல் இவர் காணாமல் போயிருந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இவரின் மர்மமான உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவரது மனைவி யாழ்ப்பாணத்தில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.