இலங்கையில் திடீர் சுற்றிவளைப்பு! 1522 பேர் கைது!

பொசன் பூரணை பருவகாலத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 1522 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலால் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இதன்போது ஆயிரத்து 541 சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்றுள்ளதோடு, சுமார் 50 லட்சம் பெறுமதியான மதுபானம், கோடா ஸ்பிரிட், வடிகட்டும் உபகரணங்கள் மற்றும் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.