3 நாட்களாக காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு – மரணம் தொடர்பில் பொலிஸாரின் தகவல்

பதுளையில் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட உயர்தர மாணவியின் மரணம் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பதுளை பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவி 3 நாட்களாக காணாமல் போயிருந்தார்.

குறித்த மாணவி மேலதிக வகுப்புக்காக சென்ற மீண்டும் வீட்டிற்கு வராத நிலையில் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய கடந்த 16ஆம் திகதி மாணவியின் சடலம் ஏரி ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் மரணம் தொடர்பில் பதுளை வைத்தியசாலையில் நேற்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. எனினும் இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவியின் பையில் இருந்து “மீண்டும் என்னை பார்க்க கிடைக்காது” என குறிப்பிட்ட கடிதம் ஒன்றும் கிழிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.