பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த இலங்கைத் தமிழ்ப் பெண் யார் தெரியுமா…..?

தென்னிந்திய தொலைக்காட்சி மூன்றாவது வருடமாக நடாத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஈழத்து பெண் ஒருவரும் கலந்துகொண்டுள்ளார்.

100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கியிருக்கவேண்டும் என்ற கொன்செப்ட் க்கு அமைய இலங்கைப் பெண்ணான லொஸ்லி மரியா உள்நுழைந்துள்ளார்.

இலங்கைத் தொலைக்காட்சி ஒன்றில் செய்திவாசிப்பாளராக பணியாற்றிய லொஸ்லியா மரியா கிளிநொச்சியைச் சேர்ந்தவர்.

செய்தி வாசிப்பாளாராக இருந்த லொஸ்லியா மொடலிங் துறையில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இவருக்கு தற்போது வயது 25 நிரம்பிய நிலையில் பிக் பாஸ் வீட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

திருகோணமலை சென்.மரியா கொலிஜ் இல் 2015ம் வருடம் க.பொ.த.உயர் தரத்தில் கல்வி பயின்றுள்ளார்.