வவுனியாவில் மனைவி வாய்க்குள் வெங்காய வெடியை வைத்து கொலை செய்த கணவன்!

வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளத்தை சேர்ந்த மீன் விற்பனை செய்யும் ரவி என்ற தொழிலாளி ஒருவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் காரணமாக அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் மாலை மனைவியின் வாய்க்குள் வெங்காய வெடி ஒன்றை வைத்து தேங்காயினால் வாய்ப்பகுதிற்கு அடித்ததன் காரணமாக தலை மற்றும் வாய் பகுதிகள் சிதறி குறித்த பெண் பலியாகியுள்ளார். என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்

இச்சம்பவத்தின் தொடர்புடையதாக கருதப்படும் கணவன் துரைராசா ரவிச்சந்திரன் என்பவர் தப்பி ஓடியுள்ளார்.

இச்சம்பவத்தில் பலியான குடும்ப பெண் சுமார் 40 வயது மதிக்கத்தக்க 3 பிள்ளைகளின் தாயார் அந்தோணியம்மா என தெரியவந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் முன்னேடுத்து வருகின்றனர்.