பிக்பாஸ் வீட்டில் முதல் நாளில் இலங்கை சேர்ந்த இருவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பு என்ன தெரியுமா?

இந்தியாவில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இதில் தற்போது பிக்பாஸ் சீசன் -3 நேற்று ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் இன்று முதல் என்பதால் போட்டியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளருக்கு பிக்பாஸ் வீட்டின் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிக்பாஸ் மூன்றாவது சீசன் முதல் வார தலைவர் யாராக இருப்பார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், பிக்பாஸின் புதிய விதிபடி வனிதா விஜயகுமார் தலைவராக பதவி ஏற்றுள்ளார்.

பிக்பாஸ் சீசன் -3ல் பங்குப்பெற்றுள்ள அனைவருக்கும் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் லொஸ்லியாவுக்கு சமையல் செய்யும் பொறுப்பும், இலங்கை சேர்ந்த இளைஞன் தர்ஷனுக்கு வீட்டை ஒழுங்குபடுத்தும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.