கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட பிரமுகர்கள் தங்கும் அறை பகுதியில் நீண்டகாலமாக உள்ள வரவேற்பு பலகையில், தமிழ் மொழியில் இலங்கையின் பெயர் தவறாக உள்ளது.
இந்த வரவேற்பு பலகை பொருத்தப்பட்டிருந்தபோதும், இதுவரை யாரும் அதை சுட்டிக்காட்டவில்லையென மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.