கண்டியில் இன்று பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
கண்டி மாநகரின் புறநகரான கடுகஸ்தோட்டையிலேயே இந்த பாரிய தீ விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கட்டுகஸ்தோட்டை அலதெனியாவில் அமைந்துள்ள தீப்பெட்டித் தொழிற்சாலையில் இந்த தீ விபத்தி நிகழ்ந்துள்ளது.
தற்பொழுது தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் கண்டி தீயணைப்புப் படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.