தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வவுனியாவில் பரவலாக துண்டுப்பிரசுரங்கள்

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வவுனியாவில் பரவலாக துண்டுப்பிரசுரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த துண்டுப்பிரசுரங்கள் வவுனியா நகர் பகுதி உட்பட பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதில் ஊழியர் நலன்புரியன் மீது வரியை அறவிடாதே, அரச வங்கியின் ஓய்வூதிய பிரச்சினையினை உடன் தீர்க்குக உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

இத் துண்டுப்பிரசுரங்களுக்கு இலங்கை வங்கி ஊழியர் சங்கம் உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.