யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் அமைந்துள்ள கடையொன்றின் மீது ஆவா குழுவினர் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
இந்நிலையில், சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.