முருகனின் செம்மஞ்சள் நிற சேவல் கொடிக்கு பதிலாக இஸ்லாமிய பச்சை நிற அரபுக்கொடி வந்தது எப்படி?

முருகனின் செம்மஞ்சள் நிற சேவல் கொடிக்கு பதிலாக இஸ்லாமிய பச்சை நிற அரபுக்கொடி வந்தது எப்படி? பாரம்பரிய சைவ சம்பிரதாயத்தை மாற்ற திட்டமிட்ட சதியா? என சந்தேகம் எழுந்துள்ளதாக பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவக் கொடியேற்றம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

கதிர்காமத்தில் வருடாந்த திருவிழா ஆரம்பிக்கும் போது கதிர்காமத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசலிலேயே கொடி ஏற்றப்படுகிறது. முருகன் கோயிலிலோ, தெய்வானை அம்மன் கோயிலிலோ கொடி ஏற்றப்படுவதில்லை. அதுவும் அரபு எழுத்துக்கள் எழுதப்பட்ட பச்சை நிறக் கொடியே ஏற்றப்படுகிறது.

பாரம்பரிய சைவ சம்பிரதாயத்தின் படி கதிர்காம முருகன் கோயிலில் முருகனின் சேவல் கொடி ஏற்றப்பட்டு, அங்கிருந்து தெய்வானை அம்மன் கோயிலுக்கு கொடி எடுத்து வரப்பட்டு, அங்கு கொடிக்கு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்ட பின் பக்கீர் மடத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள கொடிக்கம்பத்தில் கட்டப்படும்.

கதிர்காமம் பற்றி எழுதப்பட்டுள்ள பழைய நூல்களில் இந்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பாரம்பரிய சைவ சம்பிரதாயம் ஏன் மாற்றப்பட்டது? இந்து சமய அமைப்புக்கள் இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமா? கதிர்காம முருகன் கோயிலில் மீண்டும் சேவல் கொடி ஏறுமா?

பாரம்பரிய சைவ சம்பிரதாயம் காப்பாற்றப்படுமா? புரியாத புதிர் – கந்தன் ஆலயத்தின் ஆரம்ப நாள் கொடியேற்றம் எதற்காக பள்ளிவாயலில் ஏற்றப்படுகின்றது.

கந்தப்பெருமானின் ஆலயத்தில் சேவல் கொடியல்லவா ஏற்றப்பட வேண்டுமென பக்தர்கள் அங்கலாய்க்கின்றனர்.