யாழில் 23 வயது பெண் கைது… கணவன் ஏற்கன்வே கைது! நடந்தது என்ன? பொலிஸ் அதிரடி..

யாழ்.உடுவில் பகுதியில் 23 பெண் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸாா் கூறியுள்ளனார்.

குறித்த பெண் தனது கை பையில் ஹெரோயின் வைத்திருந்ததாக நேற்று இரவு கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உடுவில் மல்வம் பகுதியில் போதைப் பொருள் விற்பனை இடம்பெறுவதாக சுன்னாகம் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அதே இடத்தை சேர்ந்த 23 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணின் கைப்பையில் இருந்து 8 கிராம் ஹேரோயின் போதைப் பொருளை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவரது கணவர் கடந்த வருடம் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.